Tuesday, January 11, 2011

என் உயிரும் உறையுதே

பாதகத்தியே!........
நீ
என் இரு கை
பிடிக்கையிலே
இறகு முளைக்குதே!.......
கொஞ்சம்
இறுக்கி பிடிக்கையிலே
இதயம் உடையுதே!........
உனை
பார்க்கும் தருணம்
என்
உயிரும் உறையுதே!.......
எனை கடந்தபொழுது
உறைந்த உயிரும் உதிருதே!.....
நீ
திரும்பி பார்த்த நொடியினிலே
திரும்பம் பெற்றேன்
எனதுயிரை!.....

...........ப்ரியமுடன்
பிரகதீஸ்