Monday, June 6, 2011

வான வில்லும் வற்றியதே

தேவதையே!....
கடலின் நீலம்
கறைந்ததே
கண்ணே உனை
கவி வடிக்க!.........
வான வில்லும்
வற்றியதே
பெண்ணே
உனை வடிக்க!.......

...........ப்ரியமுடன்
பிரகதீஸ்

Monday, February 21, 2011

நீ என் காதலின் விடை

பேதையே!...
நீ
காதல் விதையாய்
விழுந்திருந்தால்
விட்டிருப்பேன் என் காதலை......
நீ
என் காதல் விடையாய்
வந்து விழுந்ததினால்
இனிமேல்
விட்டிடுவேன் எனதுயிரை.....

...........ப்ரியமுடன்
பிரகதீஸ்

Thursday, January 13, 2011

உழவன்

உழவன்!.....
நேற்று!.....
கணக்கு பார்த்தான்
உலக்கு அரிசி மிஞ்சவில்லை...
இன்று!...
கணக்கு பார்க்கிறான்
உடுத்திய உடை கூட
மிச்சமில்லை....
நாளை!....
கணக்கு பார்க்க
அவன் உயிர் கூட மிச்சமிருக்காது......

...........ப்ரியமுடன்
பிரகதீஸ்

Tuesday, January 11, 2011

என் உயிரும் உறையுதே

பாதகத்தியே!........
நீ
என் இரு கை
பிடிக்கையிலே
இறகு முளைக்குதே!.......
கொஞ்சம்
இறுக்கி பிடிக்கையிலே
இதயம் உடையுதே!........
உனை
பார்க்கும் தருணம்
என்
உயிரும் உறையுதே!.......
எனை கடந்தபொழுது
உறைந்த உயிரும் உதிருதே!.....
நீ
திரும்பி பார்த்த நொடியினிலே
திரும்பம் பெற்றேன்
எனதுயிரை!.....

...........ப்ரியமுடன்
பிரகதீஸ்