Wednesday, August 18, 2010

செல்ல கோபம்

பூக்களின் அரசியே!....
நீ
என் வீட்டு
பூ செடிகளின் ஓரம்
தலை துவட்டும்போது
தெறிக்கும்
நீர் திவலைகள்
பூ செடிகளின் மேல்
பட்டவுடன்

சற்றே பறிதவித்துதான்
போகின்றன
!
பூ செடிகள்............
அங்கு வரும்
வண்ணத்துப்பூச்சிகளும்
தேனு
றுஞ்சிகளும்
பூவின் தேனை
விட்டு விட்டு
உன் தலையில்
உதிர்ந்த
நீர் திவலைகளை
திருடிச் செல்கின்றன!...........
என் வீட்டு பூக்களுக்கு
செல்ல கோபம்தான்
உன் மேல்.................
............ப்ரியமுடன்
பிரகதீஸ்




மழை துளி முத்தாக......

கள்ளியே!......
கடலோரம் நீ
நடக்க
கள்ளி
மேனி தொட
நினைத்த கார்மேகம்
கண்ணீராக கரைந்தது.........
மழை துளி
வாங்கிய
சிப்பிகள்
முத்தக மாற்ற
முன்னூறு வருடங்கள்
ஆகுமாம்.....
உன்னை பார்த்து
வாய் திறந்த சிப்பிகள்!.....

உன் மேல் பட்டு தெறித்த
மழை துளிகள்..........
சிப்பிகள் மூடும்
முன்னரே
முத்தாக......

............ப்ரியமுடன்
பிரகதீஸ்