கள்ளியே!........
சிறு பிள்ளையில்
நீயும் நானும்
நாம் பெயரை
கள்ளியில்
எழுதி விளையாண்டோம்
நான் எழுதிய பொழுது
கள்ளி கண்ணீர் வடித்தது
கள்ளி பாலாக....................
நீ
எழுதிய பொழுது
மயங்கி
கண்ணீர் விட மறந்து
புன்னகை பூ பூத்தது
பூக்களாக.........
பல வருடங்கள்
கழித்து பார்த்தேன்....
அதிசயித்துப்போனேன்
நீ
எழுதியதை
அந்த கள்ளி
உலக அதிசயமென
பொக்கிஷமாக
பாதுகாப்பதை எண்ணி....
கள்ளியே கள்ளிக்கும்
உன் மேல்
காதலோ?................
............ப்ரியமுடன்
பிரகதீஸ்