தேவதையே!......
அன்று இரவு
நீ ஏற்றிய
மெழுகுவர்த்தியில்
உன் அழகு முகம் பார்த்தேன்
என் இதயத்தின்
வெளிப்பாடாய்
அந்த மெழுகுவர்த்தி......
எப்படி சொல்ல
மெழுகுவர்த்தியிடம்
இன்று ஒரு நாள்
மட்டுமே உனக்கு
மரண தண்டனை ........
தினம் தினம் பார்க்கும்
எனக்கு எத்தனை மரண தண்டனை
என்று எண்ணிப்பார்.....
இந்த மரண தண்டனையும்
என் மனம் ஏங்கி தவிக்கும் தண்டனைதான்....
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்