Friday, July 9, 2010

ஆயுள் ரேகை

தோழியே!...
என் கை பிடித்து
ஒரு நாள் விளையாட்டாய்
என் ஆயுள் ரேகை
அழுத்தமாய் உள்ளது என்றாய்.
நீதான் என் ஆயுள் - என்பது
அறியாமல்...

............. ப்ரியமுடன்
~பிரகதீஸ்

காலடி சுவடு

பெண்ணே !
நீ பங்கேற்ற
கோலப்போட்டியில் நான் நடுவனாக....
நீ வரைந்த கோலத்திற்கு...
முதலிடம் கொடுக்கவில்லை... நான்....
அதன் அருகில் நீ......
பதித்து இருந்த உன்
காலடி சுவடுக்கு கொடுக்கப்பட்டது....

........ப்ரியமுடன்
~பிரகதீஸ்

நீயும் ஒரு அன்னப் பறவை

நீயும் ஒரு அன்னப் பறவை
நம்பவில்லையடி!...
நீரில் கலந்த பாலை மட்டும் குடிக்கும்
அன்னப் பறவை ஒன்று உள்ளதென்று....
நம்பினேன்.....
உடலை விட்டு உயிரை மட்டும் குடிக்கும்....
உன் கண்களை சந்தித்த பிறகு!....


................ப்ரியமுடன்
-பிரகதீஸ்

எட்டாவது உலக அதிசயம்

உன் காலடி சுவடு கூட
எனக்கு எட்டாவது உலக
அதிசயமடி...
................ப்ரியமுடன்
பிரகதீஸ்