தொடர்ந்த நாட்கள் தான்
எத்தனை?..
நீ என்னை அவ்வப்போது
கண்களால் கவர்ந்து
இழுத்தாலும்....
உன்னுள் நான்
இருக்கிறேனா என்ற சலனம்
என் மனதிற்குள்...
எல்லோரும் அமர்ந்த பேருந்தில்
உன் அருகில் ஒரே ஒரு இடம்
நான் மட்டும் நின்று கொண்டிருக்க
சற்று தள்ளி அமர்ந்து....... அப்போது
நீ என்னை பார்த்த பார்வையில் தான்
உன்னுள் நானிருக்கிறேன்
என்பது தெரிந்தது......