Wednesday, September 1, 2010

பிடிவாதம் பிடித்த வதமடி

தேவதையே!....
நான்
உன்னை
பின் தொடர்ந்த
நாட்கள் தான்
எத்தனை எத்தனை....
என்
காதலை பார்த்த
உன் நிழல் கூட
என் நிழலை
காதலிக்க கற்றுக்கொண்டது!...........
நீ என்னை
கடக்கும் நேரம் அவைகள்
முட்டி மோதி
கொஞ்சிக் கொள்கின்றன......
உன் நிழல்
என் நிழலிடம்
கூறியதாம் இருந்தாலும்
என்னவளுக்கு இத்தனை
பிடிவாதம் கூடாதென்று...............
உன் நிழலுக்கு
தெரியவில்லை இந்த
பிடிவாதம் தான்
இத்தனை நாள்
என் தேவதை தரிசனத்தோடு
உன்னை பின்தொடர்ந்து
காதலிக்க
வைத்தது என்று...........
இந்த பிடிவாதம்
என் இதயத்துக்கு
பிடித்த வதமடி.........

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

No comments:

Post a Comment