பெண்ணே!....
நீ!....
நடந்து செல்லும்
வழியில் உள்ள
சாலையோர
சருகு மரங்களை
பார்க்கும் பொழுது.........
நீ!....
ஒரு நாள்
பச்சை வண்ண தாவணி
அணிந்து வந்ததை
பார்த்த
வெட்கத்தில் என்று
மட்டும் தெரிகிறது..............
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
சகியே.....
உனக்காக நான்
காத்திருக்கும்
நேரம் கூட
நேர்த்திக்கடன்தானடி....... ............ப்ரியமுடன்
பிரகதீஸ்
இன்றைய இளைஞர்கள்
சிகரத்தை தொட
நினைக்கும்
இளைஞர்கள் கையில்
சிகரெட்............
கனவு
கனவு
காண்பது
தவறல்ல
கனவிலே
வாழ்வது தான்
தவறு..............
...........ப்ரியமுடன்
பிரகதீஸ்
மாணவர்களே இல்லாத வகுப்பறையும் ஒவ்வொரு வருடமும் தேர்ச்சி பெற்று முன்னேறுகிறது தேர்வு எழுதாமல்...................ப்ரியமுடன்
பிரகதீஸ்
தேவதையே!....
நான்
உன்னை
பின் தொடர்ந்த
நாட்கள் தான்
எத்தனை எத்தனை....
என்
காதலை பார்த்த
உன் நிழல் கூட
என் நிழலை
காதலிக்க கற்றுக்கொண்டது!...........
நீ என்னை
கடக்கும் நேரம் அவைகள்
முட்டி மோதி
கொஞ்சிக் கொள்கின்றன......
உன் நிழல்
என் நிழலிடம்
கூறியதாம் இருந்தாலும்
என்னவளுக்கு இத்தனை
பிடிவாதம் கூடாதென்று...............
உன் நிழலுக்கு
தெரியவில்லை இந்த
பிடிவாதம் தான்
இத்தனை நாள்
என் தேவதை தரிசனத்தோடு
உன்னை பின்தொடர்ந்து
காதலிக்க வைத்தது என்று...........
இந்த பிடிவாதம்
என் இதயத்துக்கு
பிடித்த வதமடி.........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்