Friday, July 16, 2010

கல் கூட பொக்கிஷமாக

தோழியே
நீ என் மேல்
எரிந்து விளையாண்ட
கல் கூட - என்

அறையில்
பொக்கிசமாக!...
நீ கொடுத்த மிட்டாய்
பேப்பர் கூட - என்
அறை சுவர்கள் முழுவதும்
அழங்கரிப்பனாக!......
நீ கொடுத்த ஒவ்வொன்றும்
என் அறையில் நினைவு சின்னமாக!...
ஒரு நாள் - உன்
பெற்றோருடன் என்
அறைக்கு வருகை தந்தாய்....
என் தலையை கலைத்துவிட்டு
இவன் எப்போதுமே
இப்படி தான் அறையை
குப்பையாக வைத்திருப்பான் - என்றாய்
இதெல்லாம் நீ கொடுத்தது என்று
தெரியாமல்....
அன்று போல இப்போதும்
நான் உன்னை காதலிப்பது தெரியாமல்...
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

No comments:

Post a Comment