Friday, July 30, 2010

காதல் வசப்பட்டதால்.....

தோழியே!....
தடுமாறி போகிறேன்
உன் மேல் நான்
காதல் வசப்பட்டதால்.....

சிறகுகள் மோதி
சிதைந்ததுண்டா?
சிதைந்து போகிறேன்
நீ ஒவ்வொரு முறை
என் மேல் சாயும்பொழுது......

மயிலிறகு வருடியதால்
மரணித்ததுண்
டா?...........
மரணிக்கிறேன்
என் முகத்தில்
உன் கூந்தல்
வருடும்
ஒவ்வொரு முறையும்.....

மழை சாறல் பட்டு
மயங்கியதுண்டா?..............
மயங்குகிறேன்
நீ மழையில் என்
கை விரல் பிடித்து
நடக்கையில்...............

தென்றல் தீண்டி
தீ மூட்டியதுண்டா?......
தீ மூட்டுகிறது
உன் தாவணி
என் மேல் தீண்டும்பொழுது...
.........


.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

கண்ணீர் துளி

Thursday, July 29, 2010


எங்கள் ஊர் பெற்றோர்கள்

மண் வெட்டி வெட்டி
வெந்து போன
உங்களின் கைகளும்
மண்ணில் சிந்திய
வியர்வை துளிகளும்
எங்களின்
நோட்டு புத்தகங்களாக!......

எங்கள் ஆசிரியர்
சொல்லும் போது தெரியவில்லை
உயிர் எழுத்துக்களின் வலிமை....
நீங்கள்
உயிரை கொடுத்து சிந்திய
இரத்தமும் வியர்வையும்
எங்கள் பேனாக்களில்
வழிந்தன உயிர் மை (மெய்) எழுத்துக்களாக...
அப்போதுதான் தெரிந்தது
உயிர் எழுத்துக்கள்
ஒவ்வொன்றிலும் உங்கள்
உயிர் உள்ளதென்று.........

கல்லூரியில் படிக்கும்
நாங்கள்!..
கால் வயிற்றுடன்
இருக்க கூடாதென்று
நீங்கள்
முழு நாளும் பட்டினி கிடப்பது
நாங்கள் செய்த பாவமா?...
இல்லை பாக்கியமா?..... - ஆம்
நாங்கள் செய்த பாக்கியம் தான்
உங்களின் வயிற்றில்
பிள்ளைகளாக பிறந்தது!..............


உங்களிடம்
உள்ளதோ ஒரே ஒரு ஆடை
அதிலும் ஓராயிரம் ஓட்டைகள் - ஆனால்
எங்களின்
ஆடை அழுக்காக உள்ளதென்று
புதிய ஆடை வாங்கித்தரும்
புத்தர்கள் அல்லவா
நீங்கள்!..........

கல்லூரிக்கு போகும்
நாங்கள்
கலங்க கூடாதென்று
எங்களின் பைகளில்
பல புதிய நூறு ரூபாய் நோட்டுகள்
திணித்தவர்கள் நீங்கள் ....
ஆனால் !....
உங்களின்
பைகளில் கிழிந்த
ஒரே ஒரு
ஒரு ருபாய் நோட்டு
ஓராண்டிற்கும் மேலாக...

நாங்கள்
பஞ்சணையில் உறங்க
நீங்கள் உண்ணுவது
பழைய சோறும்
பட்ட மிளகாயுமா?....
இது நாங்கள் வாங்கிய வரமா?...
இல்லை சாபமா?.... - ஆம்
நாங்கள் வாங்கிய வரம் தான்
உங்களின் செல்வங்களாக பிறந்தது......

உங்கள்
கைகளில் இரத்தம்
வழிந்தாலும்.
கல்லூரிக்கு செல்லும்
எங்களின் கால்களில்
கல் குத்திவிடுமே என்று எண்ணி
காலனி வாங்கி தந்த
கடவுள்கள் தானே
நீங்கள் .... - ஆம்
எங்களுக்கு நீங்கள்
கடவுள்தான்.........
உங்களுக்கு தான் பொருந்தும்
இந்த வரிகள்
மாதா , பிதா , குரு , தெய்வம் .

உங்களின்
பிள்ளைகள் கல்வி பயில
உயிரை விடுங்கள்
என்றால்
உங்களுக்கு தான்
எவ்வளவு போட்டி
உங்களின் உயிரை விட...
இது போதாதென்று
காலம் எல்லாம்
உங்கள்
தோள்களில் சுமந்து
எங்களை கடனாளியாக
ஆக்கிவிட்டீர்கள்...
எத்தனை பிறவி எடுத்தாலும்
உங்களின் கடனை அடைக்க
முடியாமல்... நாங்கள்..
எங்களின் கண்ணீரை
உங்களின் பாதங்களில்
காணிக்கை ஆக்குகிறோம்.......

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

இலை உதிர் காலம்

Sunday, July 25, 2010

என் இதயம்......

தோழியே!.....
நீ
ஒவ்வொரு முறை
என் கை
பிடிக்கும் பொழுது
எனக்குள்
காதல் மரம்
தளிர் விடுகிறது....
நீ..........
என் கையை
விடும் தருணம்
தென்றலில்
ஆணி வேறோடு
பிடுங்கப்பட்ட
மரம் போல்
என் இதயம்......
கடைசியாக நீ
வீசிச்சென்ற பார்வையில்
பிடுங்கப்பட்ட
தடயம் கூட
தழும்புகளாக.......

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Saturday, July 24, 2010

வள்ளுவன்.. உன்னை பார்த்திருந்தால்

பெண்ணே!..
இரு வரிக்குள்
உலகையே அடக்கிய
வள்ளுவன்..
உன்னை பார்த்திருந்தால்
உன்னை வர்ணிக்க..
இருபது கோடி
நுற்றாண்டு காலம்
வாழ்ந்திருந்தாலும்
முடித்து இருக்க மாட்டான்
இரு வரி கவிதையை....

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Thursday, July 22, 2010

சிறகுகள் இல்லாமல் பறக்கிறேன்

பெண்ணே!....
சிறகுகள் இல்லாமல்
பறக்கிறேன்

நீ எனை பார்க்கும்
தருணத்திலே
.......
கால்கள் இல்லாமல்
நடக்கிறேன்
உன் நினைவு
பாதையிலே
.........
கைகள் இல்லாமல்
அணைக்கிறேன்

நான் கண் உறங்கும்
நேரத்திலே
.....
உயிர் இல்லாமல்
அலைகிறேன்

நீ எனை வெறுக்கும்
பொழுதினிலே
......

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Wednesday, July 21, 2010

தோழி - காதலி


தோழி எதையும் எதிர்பாராமல்
காதலி அன்பை எதிர்பார்த்து......
தோழி என் காதலுக்காக
என் பெற்றோரிடம் பேசுவாள்..
காதலி
என் காதலுக்காக
அவள்
பெற்றோரிடம் நான் பேசுவேன்...
தோழி காதலி வருவதை பார்த்தாள்
சற்று தள்ளி அமருவாள்.... தன்
இடைவெளியை வெளிப்படுத்த..
காதலி தோழி வருவதை பார்த்தாள்
சற்று நெருக்கமாக அமருவாள்... தன்
நெருக்கத்தை வெளிப்படுத்த........
தோழி கண்ணீரை துடைப்பாள்....
காதலி கண்ணீரை தருபவள்...
தோழி எனக்காக உயிரை கொடுப்பாள்..
காதலி தனக்காக வாழ உயிரை எடுப்பாள்....


...........................................தோழி - காதலி தொடரும்...................................

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

உன் அழகில் மயங்கி

தோழியே!....
என்
காதலை சொல்லி
அனுப்பிய ரோஜா கூட
என்னை போலவே
உன் அழகில் மயங்கி
ஊமையாகி உன்
தலையில்........

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Tuesday, July 20, 2010

ஏங்கி தவிக்கும் மரண தண்டனை

தேவதையே!......
அன்று இரவு
நீ ஏற்றிய
மெழுகுவர்த்தியில்
உன் அழகு முகம் பார்த்தேன்
என் இதயத்தின்
வெளிப்பாடாய்
அந்த மெழுகுவர்த்தி......
எப்படி சொல்ல
மெழுகுவர்த்தியிடம்
இன்று ஒரு நாள்
மட்டுமே உனக்கு
மரண தண்டனை ........
தினம் தினம் பார்க்கும்
எனக்கு எத்தனை மரண தண்டனை
என்று எண்ணிப்பார்.....
இந்த மரண தண்டனையும்
என் மனம் ஏங்கி தவிக்கும் தண்டனைதான்....

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Monday, July 19, 2010

தென்றல்...

அன்று அழகான
மாலை நேரம்
தென்றல் உன்
கூந்தலை தொட்டுபார்க்க
எண்ணிய அந்த நொடி
எங்கிருந்தோ வந்த சிறிய
தூசி உன் கண்களை கலங்கடிக்க
செய்வதரியாது திணறிய தென்றல்...
மேகத்தை அழைத்து... தன்
துயரத்தை வெளிப்படுத்தியது
கண்ணீராக!...
உன் மேல்
மழைத்துளி...

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Sunday, July 18, 2010

விழி ஈர்ப்பு விசை

சகியே...
நல்ல வேலை
அன்றே பிறந்துவிட்டான்..
ஐசக் நியூட்டன்....
இந்த யுகம் பிறந்து
உன் கண்களை
சந்தித்து இருந்தால்
விழி ஈர்ப்பு விசை அல்லவா
எழுதி இருப்பான் ....
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

சுவாசிக்கிறேன்...

பெண்ணே!..
கருவறையில்

என் தாயின்
சுவாசக்காற்றை
சுவாசித்தேன்...
இப்போது
உன்
சுவாசம் கலந்திருக்கும்
என்பதால் சுவாசிக்கிறேன்...
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Saturday, July 17, 2010

என் கவிதை பிடிக்கவில்லை

அழகியே!..
ஒவ்வொரு நாளும்
நான் எழுதும்
கவிதை எனக்கு பிடிக்கவில்லை...
உன் அழகு
ஒவ்வொரு நாளும்
அதிகரிக்கும்பொழுதும்...
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

இஷ்ட தெய்வம்

தேவதையே
நீ
கோவிலை
சுற்றி வருகிறாய்
நான்
உன்னையே
சுற்றி வருகிறேன்
இருவருமே
இஷ்ட தெய்வத்தையே
சுற்றி வருகிறோம்.....
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Friday, July 16, 2010

கல் கூட பொக்கிஷமாக

தோழியே
நீ என் மேல்
எரிந்து விளையாண்ட
கல் கூட - என்

அறையில்
பொக்கிசமாக!...
நீ கொடுத்த மிட்டாய்
பேப்பர் கூட - என்
அறை சுவர்கள் முழுவதும்
அழங்கரிப்பனாக!......
நீ கொடுத்த ஒவ்வொன்றும்
என் அறையில் நினைவு சின்னமாக!...
ஒரு நாள் - உன்
பெற்றோருடன் என்
அறைக்கு வருகை தந்தாய்....
என் தலையை கலைத்துவிட்டு
இவன் எப்போதுமே
இப்படி தான் அறையை
குப்பையாக வைத்திருப்பான் - என்றாய்
இதெல்லாம் நீ கொடுத்தது என்று
தெரியாமல்....
அன்று போல இப்போதும்
நான் உன்னை காதலிப்பது தெரியாமல்...
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Thursday, July 15, 2010

கண்ணீர் துளிகள்.......

தோழியே!
உன்னிடம் ஏதேதோ
பேசிய நான்....
ஆயிரம் முறை
ஒத்திகை பார்த்த
என்
காதலை வெளிபடுத்த
முடியாமல் ஒவ்வொரு நாளும்
நான் எழுதும்
கவிதைகளுக்கு
முற்றுப்புள்ளிகளாய்
தொடர்கின்றன - என்
கண்ணீர் துளிகள்.......

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Wednesday, July 14, 2010

எனை அறியா மாற்றம் ஏன் தோழி?.......

தோழியே!...
நீ இயல்பாக
சொல்லிவிட்டாய்
நாளை அதிகாலை
சந்திக்கலாம் என்று...
எனை எழுப்ப ஆயிரம்
முறை ஒத்திகை பார்த்த
கடிகாரம்....
நூறு முறை அதிகாலை
எழுப்ப சொன்ன நண்பன்....
கடைசியில் இவைகளை
எழுப்பியது நான்...
எனை அறியா மாற்றம்
ஏன் தோழி?.......
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

காதல் பாலம்

பிரியமானவளே!....
உன்
வருகைக்காக
வானம் வரைந்த
காதல் பாலம் தான்
அழகான
வானவில்...

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

கல்லூரி நட்பு

காலையில் தூறும்
பனித்துளிகளாய் நாம்
கல்லூரிக்கு வந்தோம்...
காலம் என்னும்
கதிரவன் பட்டு
கண் பார்வையில்
மறைந்தாலும் - நம்
கல்லூரி நட்பு என்றும்
மறையாது.......

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Tuesday, July 13, 2010

முதல் உலக அதிசயம் நீ...

பெண்ணே!...
நான்
பார்த்து ரசித்த
முதல் உலக
அதிசயம் நீ...
உன்னைக் கண்டால்
அந்த
உலக அதிசயங்களும்
உன் மேல் காதல்
கொள்ளும்......

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

Monday, July 12, 2010

பாத சுவடு

தோழியே...
ஆயிரம் பேர்
கடந்து சென்ற
கடற்க்கரை மணலில்..
கண்டறிவேன் - உன்
அழகிய பாத சுவடை
நீ....
கடந்து சென்றது
என் இதய சுவடல்லவா?...

............ ப்ரியமுடன்
~பிரகதீஸ்

நகல் நிழலாக..

பெண்ணே!
உன்னை நகல்
எடுப்பதற்காக
தினம் தினம்
வந்து போகிறது
சூரியன் ...
நகல் நிழலாக..

............ ப்ரியமுடன்
~பிரகதீஸ்

Sunday, July 11, 2010

வெட்கம்

பெண்ணே!
தென்றல் உன்
கூந்தல் அசைவில்
நடனம் கற்க்கிறது....

உன் கூந்தலிள்ளிருந்து
ரோஜா விழுந்ததன் காரணம்?
தன் அரசியின் கூந்தலில்
இருந்த வெட்கத்தில?.....


............ ப்ரியமுடன்
~பிரகதீஸ்

Friday, July 9, 2010

ஆயுள் ரேகை

தோழியே!...
என் கை பிடித்து
ஒரு நாள் விளையாட்டாய்
என் ஆயுள் ரேகை
அழுத்தமாய் உள்ளது என்றாய்.
நீதான் என் ஆயுள் - என்பது
அறியாமல்...

............. ப்ரியமுடன்
~பிரகதீஸ்

காலடி சுவடு

பெண்ணே !
நீ பங்கேற்ற
கோலப்போட்டியில் நான் நடுவனாக....
நீ வரைந்த கோலத்திற்கு...
முதலிடம் கொடுக்கவில்லை... நான்....
அதன் அருகில் நீ......
பதித்து இருந்த உன்
காலடி சுவடுக்கு கொடுக்கப்பட்டது....

........ப்ரியமுடன்
~பிரகதீஸ்

நீயும் ஒரு அன்னப் பறவை

நீயும் ஒரு அன்னப் பறவை
நம்பவில்லையடி!...
நீரில் கலந்த பாலை மட்டும் குடிக்கும்
அன்னப் பறவை ஒன்று உள்ளதென்று....
நம்பினேன்.....
உடலை விட்டு உயிரை மட்டும் குடிக்கும்....
உன் கண்களை சந்தித்த பிறகு!....


................ப்ரியமுடன்
-பிரகதீஸ்

எட்டாவது உலக அதிசயம்

உன் காலடி சுவடு கூட
எனக்கு எட்டாவது உலக
அதிசயமடி...
................ப்ரியமுடன்
பிரகதீஸ்

Thursday, July 8, 2010

முகப்பரு

ஏ பெண்ணே ...
உனக்கு அவமானமாக தோன்றும் ...
உன் முகபரு - எனக்கோ!...
ரோஜாவின் மேல் உள்ள பனித்துளி
ஒவ்வொன்றும்..
ரோஜாவிற்கு அழகுதான்....

................ப்ரியமுடன்
பிரகதீஸ்

Tuesday, July 6, 2010

உலக அதிசய அழிவு

இனியவளே..
நீ ஒவ்வொரு முறையும்
நகத்தை வெட்டும் பொழுதும்
உலக அதிசயங்களில்
ஒன்றை அழிப்பதாகத்தான்
நான் நினைக்கிறேன்....

.......ப்ரியமுடன்
. பிரகதீஸ்

Sunday, July 4, 2010

மன்னிப்பு

பெண்ணே!..
நீ கடற்கரையில்
நடந்து செல்கயில்
உன் பாதங்கள் உருவக்கிய
உலக அதிசயத்தை!.....
கடல்....
தொட நினைத்து அதை
அழித்ததை எண்ணி
உன் காலடியில்
மன்னிப்பு கேட்பது
தெரியவில்லையா அலைகளாக.........

........... ப்ரியமுடன்
~பிரகதீஸ்